ஆப்நகரம்

கேரளா: ஜிஷாவைக் கொன்றவர் ஆடுடன் உடலுறவா?

திருச்சூர்: கேரளாவில் ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட அமீருல் இஸ்லாம் ஆடுடன் உடலுறவு வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

TOI Contributor 17 Jun 2016, 2:30 pm
திருச்சூர்: கேரளாவில் ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட அமீருல் இஸ்லாம் ஆடுடன் உடலுறவு வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil kerala rape case accused had sex with goat suspect police
கேரளா: ஜிஷாவைக் கொன்றவர் ஆடுடன் உடலுறவா?


கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டம் படித்து வந்த ஜிஷாவை கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் அசாமைச் சேர்ந்த 23 வயது அமீருல் இஸ்லாம் என்பவரை காஞ்சிபுரத்தில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற இடத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். கொலைக்குப் பின்னர் சொந்த மாநிலமான அசாம் சென்ற அமீருல் பின்னர் காஞ்சிபுரம் வந்து அங்கு வேலை பார்த்து வந்துள்ளான்.

பெரும்பாவூரில் தங்கி இருந்தபோது அங்கு கட்டப்பட்டு இருந்த ஆடு உடன் அமீருல் உடலுறவு வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆட்டின் மர்ம உறுப்பில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததாலும், இந்த சம்பவத்துடன் ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து, மர்ம உறுப்பை சிதைத்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், ஆட்டுக்கு ஏற்பட்ட காயங்கள் அமீருல் கொண்ட உடலுறவால்தான் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரிய வரவில்லை. கால்நடை மருத்துவ பரிசோதனைக்காக ஆடு அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் ஒரு கொலை வழக்கு அமீருல் மீது இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் குளிப்பதை அடிக்கடி அமீருல் பார்த்து வந்துள்ளார். அப்படி பார்க்கும்போது ஒருமுறை பெண்களிடம் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜிஷா சிரித்துள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து அமீருல் கொன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி