ஆப்நகரம்

ஸ்மார்ட் வகுப்பறை; எல்லாம் டிஜிட்டல் மயம்; 20,000 பள்ளிகளை ஹைடெக்காக மாற்றும் கேரளா!

அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.

TNN 24 Nov 2017, 6:44 am
திருவனந்தபுரம்: அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.
Samayam Tamil kerala schools will be digitalized soon
ஸ்மார்ட் வகுப்பறை; எல்லாம் டிஜிட்டல் மயம்; 20,000 பள்ளிகளை ஹைடெக்காக மாற்றும் கேரளா!


கேரளாவில் ஆட்சி நடத்தி வரும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதியை நிலைநாட்டுவதில் பிற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது.

டெங்குவில் இருந்து அதிவேகத்தில் மீண்டெழுந்த செயல்பாடு, அனைத்து பிரிவினரையும் அர்ச்சகராக்கியது உள்ளிட்டவை ஆச்சரியங் கொள்ள வைக்கின்றன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்தை தற்போது கையிலெடுத்துள்ளது.

இதற்கு ‘கேரள கட்டமைப்பு மற்றும் தொழிற்கல்வி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 4,775 பள்ளிகளில் உள்ள 45 லட்சம் வகுப்பறைகளை, ‘லேப்-டாப்’ உள்ளிட்ட கருவிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறை நிலைக்கு நவீனமயமாக்கப்படும்.

முதல்கட்டமாக வரும் ஜனவரி மாதத்திற்குள் 20,000 வகுப்பறைகள் நவீனப்படுத்தப் படுகிறது.

Kerala Schools will be digitalized soon.

அடுத்த செய்தி