ஆப்நகரம்

கஜா புயல் பாதித்த தமிழகத்தை மீட்க, பக்க பலமாக நிற்போம்: கேரள முதல்வர்!

திருவனந்தபுரம்: புயல் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய கேரளா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 3:12 pm
வங்கக்கடலில் உருவான கஜா புயல், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் கரையைக் கடந்தது. இதனால் தென் தமிழகத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
Samayam Tamil Pinarayi Vijayan


பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேதமடைந்த விவசாய நிலங்களை மதிப்பீடு செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக கேரள மாநிலம் நிற்பதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் வர, கேரளா தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும். குடிநீர், படுக்கை விரிப்பு, மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்கள், புதிய துணிகள் ஆகியவை திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி