ஆப்நகரம்

பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி இல்லை- பினராயி விஜயன் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி ஏற்படவில்லை என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Samayam Tamil 20 Jul 2018, 5:45 pm
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி ஏற்படவில்லை என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Samayam Tamil pinarayi-vijayan-1531037433
பிரதமர் மோடியுடன் சந்திப்பு- பினராயி விஜயன் கருத்து


டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட 22 பேர் கொண்ட குழு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

அதை தொடர்ந்து, பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய குழுவினரை அனுப்பி அதற்கேற்ப நிவாரண நிதி வழங்குமாறு கோரினோம். அதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்ததாக பினராயி விஜயன் கூறினார்.

தொடர்ந்து கேரளாவிற்கான உணவு தானிய ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மேலும் கேரளாவின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மறுத்துவிட்டதாக பினராயி விஜயன் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் எந்த பலனும் இல்லை. அவரிடம் கேரளா மாநில வளர்ச்சி தொடர்பாக பேசியதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி