ஆப்நகரம்

கேரள மாணவியை சமூக வலைதளங்களில் கேலி செய்த விவகாரம் : ஒருவர் கைது

கேரளாவில் மீன் விற்ற மாணவியை சமூக வலைதளங்கில் விமர்சித்த விவகாரத்தில், வயநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 28 Jul 2018, 12:17 pm
கேரளாவில் மீன் விற்ற மாணவியை சமூக வலைதளங்கில் விமர்சித்த விவகாரத்தில், வயநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 65158779


கொச்சியில் 19 வயது மாணவி ஹனான் மனநிலை சரியில்லாத தாயைக் கவனித்துக்கொண்டு மீன் விற்று அதில் கிடைத்த வருவாயில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார். இவர் குறித்து மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட,அவருக்கு நிதியுதவி குவிந்தது. மலையாள இயக்குநர் அருண் கோபி தன் புதிய படத்தில் நடிகர் பிரணவ் மோகன்லாலுடன் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் மாணவி குறித்த செய்தியில் உண்மை தன்மையை சிலர் விமர்சித்தனர்.

இதற்கு எதிராக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.கேரள மத்திய அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் கேரள முதல்வர் பினராய்விஜயன் ஆகியோர் மாணவிக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவி ஹனானனை விமர்சித்த விவகாரத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் நூருதீன் ஷேக் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் வயநட்டை சேர்ந்தவர் ஆவார் . இந்நிலையில் இவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி