ஆப்நகரம்

கேரளாவிலும் மாணவர்கள் போராட்டம்... எம்.எல்.ஏ வை அடித்த போலீசார்

கேரள மாநிலம் திருவனனதபுரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டதாக்குதலில் மாணவர் அமைப்பு தலைவர் அபிஜித் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சாஃபி பரம்பில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

Samayam Tamil 20 Nov 2019, 10:26 pm
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பல்கலைகழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வுகளில் சராசரி மதிப்பெண்ணைக் கூடத் தாண்டாத மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil MLA attcked


இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மாணவர்கள் அமைப்பு என்னும் மாணவர்கள்குழு கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த தடியடியின்போது போலீசாருக்கும் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் மாணவர்கள் மீது லத்தியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மாணவர் அமைப்பு தலைவர் அபிஜித் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சாஃபி பரம்பில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனை காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி சஷி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்கள் போராட்டத்தை குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “காவல்துறை இப்படி கொடூரமாக நடந்து கொள்வதை பார்க்கவே கொடுமைடாக இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.”

கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர்கள் போராடுவது தொடர்கதையாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராடி அடக்குமுறைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் இப்படி நடந்திருப்பது கூடுதல் பரபரப்ப்பை ஏற்படுத்தி உள்ளது

அடுத்த செய்தி