கேரள அரசின் லாட்டரி
கேரளா லாட்டரி
வறுமையில் வாடிய மக்களை ஹேப்பியாக்கிய இலங்கை அரசு... குறைந்தபட்ச ஊதியத்தை 40% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!
7 நாட்கள் குலுக்கல்
கேரள அரசின் லாட்டரித்துறை தலைமை அலுவலகம் திருவனந்தபுரத்தில உள்ள கார்க்கி பவனில் இயங்கி வருகிறது. இதன் மூலம் வாரத்தின் 7 நாட்களும் குலுக்கல்கள் நடைபெற்று வருகின்றனர். திங்கள் கிழமைகளின் வின் வின் லாட்டரி, செவ்வாய்க்கிழமை ஸ்திரீ சக்தி லாட்டரி, புதன் கிழமை ஃபிப்ட்டி ஃபிப்ட்டி லாட்டரி, வியாழக்கிழமை காருண்யா பிளஸ் லாட்டரி ஆகிய டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடைபெறுகின்றன.
டிக்கெட் விலை
சாந்தன் மரணம் எதிரொலி.. ஹைகோர்ட்டில் நல்ல சேதி சொன்ன தமிழக அரசு.. ஒரு வாரத்தில் இலங்கை செல்லும் முருகன் உள்ளிட்ட 3 பேர்!
புதன் கிழமை பெரும் பரிசு
காரணம்.. ஃபிப்ட்டி ஃபிப்ட்டி லாட்டரி டிக்கெட்டிற்குதான் அதிக பரிசு தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து காருண்யா பிளஸ் மற்றும் காருண்யா லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக 80 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. வாராந்திர குலுக்கல்களை தாண்டி கேரள லாட்டரித்துறை பம்பர் லாட்டரி குலுக்கல்களையும் நடத்தி வருகிறது.
பம்பர் லாட்டரி
ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல்களை கேரள அரசின் லாட்டரித்துறை நடத்தி வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், கோடைக்கால பம்பர், விஷூ பம்பர், பருவக்கால பம்பர், திருவோணம் பம்பர் மற்றும் பூஜா பம்பர் ஆகியவை ஆகும். கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
'உன்னைவிட அதிகம் கஷ்டப்பட்டவர் அவர்'.. அண்ணாமலைக்கு ஒருமையில் பதில் அளித்த காயத்ரி ரகுராம்!
கோடைக்கால பம்பர் லாட்டரி
இதில் புதுச்சேரியை சேர்ந்த சபரிமலை பக்தர் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசான 10 கோடி ரூபாய் கிடைத்தது. இதனை தொடர்ந்து கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசாக 10 கோடி ரூபாயும் இரண்டாம் பரிசாக 50 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் பரிசு ரூ. 10 கோடி
அம்மாவ பார்த்து 2 மாசம் ஆயிடுச்சு... 8 மாசமா லீவே இல்ல... அண்ணாமலை உருக்கம்!
பல பேருக்கு பரிசுகள்
நான்காம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகை தலா 54 பேருக்கு வழங்கப்பட உள்ளது. ஐந்தாம் பரிசாக 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தலா 19440 பேருக்கு காத்திருக்கிறது. ஆறாம் பரிசாக 2000 ரூபாய் தலா 27,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது. ஏழாம் பரிசாக 1000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 38,880 பேருக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.
பம்பர் டிக்கெட் விலை ரூ. 250
கேரளா கோடைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல்.. ரூ. 10 கோடியை தட்டிதூக்கப்போவது யார்? வெளியாகும் முடிவுகள்!
அதிர்ஷ்டசாலி யார்?
இதில் எத்தனை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால் இன்னும் சற்று நேரத்தில் 10 கோடி ரூபாயை தட்டி தூக்கப்போவது யார்? பல லட்சங்களுக்கு அதிபதி ஆகப்போவது யார் என்பது தெரிந்துவிடும். கேரள கோடைக்கால பம்பர் குலுக்கல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.