ஆப்நகரம்

கேரளாவில் ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்

கேரளாவில் பெண் ஒளிப்பதிவாளர் ஒருவரை போராட்டக்கார்கள் சிலர் தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 4 Jan 2019, 3:15 am
கேரளாவில் முழு அடைப்பின் போது நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக்க முயற்சித்த ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கேரள பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்- தொடரும் பதற்றம்


சபரிமலை கோயிலுக்குள் பெண் இருவர் வழிபாடு நடத்தினர். இதை கண்டித்து சங்க் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் கேரளாவில் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தை செய்தியாக்கும் முயற்சியில் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் ஒளிப்பதிவாளர் ஷாஜிலா அப்துல்ரஹ்மான் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்கார்களில் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். பிறகு அவரை காலால் எட்டி உதைத்து தகாத வார்த்தைகளில் கடுமையாக சாடினர்.

எனினும் ஷாஜிலா சம்பவத்தை செய்தியாக்குவதில் கவனமாக இருந்தார். பிறகு தன் மீது தாக்குதல் தொடரவே, அழுகையுடன் அவர் பணியில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், போராட்டக்காரர்கள் கேமராவை பறிக்க முயன்றனர். ஆனால் என் முழு பலத்தையும் பிரியோகித்து கேமராவை காப்பாற்றிவிட்டேன். போராட்டக்கார்கள் தாக்கியதில் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்று வேதனையுடன் ஷாஜிலா கூறினார்.

தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாஜிலா, பாஜக-வை கண்டு பயப்படப்போவதில்லை. தொடர்ந்து போராட்டத்தை செய்தியாக்குவேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி