ஆப்நகரம்

Kerala Flood: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றாக சந்தித்த முதல்வர், எதிர்கட்சி தலைவர்!

கேரளாவில் வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் ஆகியோர் ஒன்றாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர்.

Samayam Tamil 11 Aug 2018, 1:30 pm
கேரளாவில் வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் ஆகியோர் ஒன்றாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர்.
Samayam Tamil pinarayi flood


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பாதி பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 29 ஆக உயா்ந்துள்ளது.



இந்நிலையில், இன்று காலை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் ஒன்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தனர். பின்னர், வெள்ளத்தால் உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும், வீடுகளை இழந்த மக்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் பினராயி விஜயன் வழங்கினார்.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 58 அணிகளில் 22 அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமாா் 53 ஆயிரம் போ் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 5 மதகுகளும் திறக்கப்பட்ட நிலையில் அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி