ஆப்நகரம்

பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடியாது: கேரள கோயில் நிர்வாகம்

கேரள மாநில கோயிலில் பட்டாசு விபத்து காரணமாக ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடியாது என கேரள கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 11 Apr 2016, 7:58 pm
திருவனந்தபுரம்: கேரள மாநில கோயிலில் பட்டாசு விபத்து காரணமாக ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடியாது என கேரள கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil keralas top temple board rules out ban on fireworks display during festivals
பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடியாது: கேரள கோயில் நிர்வாகம்


கேரள மாநிலம் கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த கோயில் உள்பட அம்மாநிலத்தில் சுமார் 1,255 கோயில்களை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவஸ்தானம்,"கோயில்களில் வானவேடிக்கை நிகழ்த்துவது பாரம்பரியம். எனவே, கோயில் திருவிழாக்களின் போது பட்டாசு வெடிப்பதை தடை செய்ய முடியாது" என்று கூறியுள்ளது.

அதேநேரம், பாட்டாசு வெடிப்பதில் அரசு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதனிடையே, விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு வெடிக்க வேண்டும் என திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கோயில்களுக்கும் அந்நிர்வாகம் அவசர சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி