ஆப்நகரம்

சென்னையில் மாங்குரோவ் மரங்களை அழிக்கும் பொதுப்பணித்துறை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள சாம்பல் மாங்குரோவ் மரங்கள் அழிக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 5 Nov 2019, 1:15 pm
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள சாம்பல் மாங்குரோவ் மரங்கள் அழிக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil key mangrove forest is being destroyed in chennai
சென்னையில் மாங்குரோவ் மரங்களை அழிக்கும் பொதுப்பணித்துறை


தலைநகர் சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கால்வாய் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது.

பக்கிங்ஹாம் கால்வாயின் கரையோரத்தில் இருக்கும் 7.1 கி.மீ நீளத்துக்கான மாங்ரோ காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது சூழலியல் ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தாஜ் மஹாலில் காற்று மாசு தடுப்பு சுத்தகரிப்பு கருவி!!

சூழலை நன்றாக்கத்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சூழலியலுக்கு பெரும் வரங்களான மாங்ரோ மரங்களை வெட்டுவது எந்த விதத்தில் ஏற்புடையது என்று தெரியவில்லை.



இதுகுறித்து பொதுப் பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்த வேலைகள் தொடங்கிவிட்டன. ஆனால், தொடங்குவதற்கு முன்பு நிபுணர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்க வில்லை” என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணு உலையில் சைபர் அட்டாக்; செய்தது யார் தெரியுமா?- வெளியான அதிர்ச்சி!

தாவரவியல் பேராசிரியர் டி.நரசிம்மன் இதுகுறித்து தெரிவித்தபோது “ மாங்குரோவ் மரங்களைப் போல சூழலைக் காக்கும் இயற்கை வரங்கள் மற்றொன்று இல்லை. புயல், சுனாமி போன்ற பேரிடர்களின் போது அலையாத்தி தாவரங்கள் என்று அழைக்கப்படும் மாங்குரோவ் மரங்கள்தான் கரைப்பகுதியை காக்கின்றன. பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் இருந்து நீக்கப்படும் இந்த மரங்கள் கூவம் ஆற்றின் பகுதியையும் சந்திக்கின்றன. இந்த மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை , அப்புறப் படுத்தப்பட வேண்டியவை அல்ல ” என்று தெரிவிக்கிறார்.

சென்னையில் சாம்பல் மாங்குரோவ் ( Avicennia marina) மரங்கள் இருக்கும் ஒரே பகுதி சென்னைப்ப் பல்கலைக்கழகத்தின் பின்புறம் இருக்கும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய்ப் பகுதிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி