ஆப்நகரம்

புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவே நான்; ஒருபோதும் ஓயமாட்டேன்: கிரண் பேடி...!

மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே நான் செயல்படுகிறேன் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

TNN 12 Aug 2017, 9:35 am
புதுச்சேரி: மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே நான் செயல்படுகிறேன் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kiran bedi says she is for development of puducherry
புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவே நான்; ஒருபோதும் ஓயமாட்டேன்: கிரண் பேடி...!


புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நாளுக்கும் நாள் மோதல் முற்றி வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரி துறைமுகம் தூர்வாருவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, நான் தற்காலிக அதிகாரியாக இருக்கலாம். ஆனால் புதுச்சேரி என்று நிரந்தரமான ஒன்று. அதன் வளர்ச்சிக்காகவே தான் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அது மட்டும் போதாது. அரசின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டும். சட்ட விதிகளை மீறாமல் அரசு செயல்படுகிறதா என்று கண்காணிப்பதே தனது பணி. தவறான முடிவுகள் எடுக்காமல் உரிய ஆலோசனையுடன் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.

அந்த முடிவுகளை மக்களுக்கு தெரிவிப்பது மிக முக்கியம் என்று கிரண் பேடி குறிப்பிட்டுள்ளார்.

Lt Governor Kiran Bedi says she is for development of Puducherry.

அடுத்த செய்தி