டெல்லி: 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து திருடவோ, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லாத காரணத்தால், அதற்கு இந்தியா உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சார்பாக இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், கோஹினூர் வைரத்துக்கு இந்தியா உரிமை கோர முடியாது என்பதே மத்திய கலாச்சார துறை அமைச்சக்கத்தின் நிலைப்பாடு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
105 காரட் கோஹினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கால் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டது என்று ரஞ்சித் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கருத்து இன்னும் கிடைக்க பெறவில்லை என்று ரஞ்சித் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து விரிவான பதில் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்திட மத்திய அரசுக்கு இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதால், அதனைத் திரும்பக் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கடந்த 9-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
கடந்த 2013-ஆம் ஆண்டில் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் சார்பாக இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், கோஹினூர் வைரத்துக்கு இந்தியா உரிமை கோர முடியாது என்பதே மத்திய கலாச்சார துறை அமைச்சக்கத்தின் நிலைப்பாடு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
105 காரட் கோஹினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கால் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டது என்று ரஞ்சித் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கருத்து இன்னும் கிடைக்க பெறவில்லை என்று ரஞ்சித் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து விரிவான பதில் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்திட மத்திய அரசுக்கு இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதால், அதனைத் திரும்பக் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கடந்த 9-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
கடந்த 2013-ஆம் ஆண்டில் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.