ஆப்நகரம்

வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போன் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Samayam Tamil 28 Mar 2018, 8:30 pm
டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போன் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Samayam Tamil flight


தலைநகர் டெல்லியில் இருந்து ஏ.ஐ. 020 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, 248 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றது. அப்போது, மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர், கொல்கத்தாவுக்கு செல்லும் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் யார், எங்கிருந்து பேசினார் என்பது தெரியவில்லை.

இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதையடுத்து அந்த விமானத்தை தரையிறக்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது

தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கி, மாற்று விமானத்தில் அனுப்பி வைத்த அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து விமானம் முழுவதுமாக சோதனையிட்டனர்.

பின்னர், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்றும், தொலைபேசியில் மர்ம நபர் வெடிகுண்டு புரளி கிளப்பியதும் தெரியவந்தது.

அடுத்த செய்தி