ஆப்நகரம்

மாணவர்கள் கவனத்திற்கு: நவம்பர் திட்டத்தில் கைகோர்க்கும் பள்ளிகள்!

கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராத சூழலில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று மாநில அரசு தெரிவித்த தகவல்களை காணலாம்.

Samayam Tamil 26 Sep 2020, 9:21 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டோம் என்ற நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அக்கறை காட்ட தவறி விடுகின்றனர். இதன் காரணமாக உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப் போனது. இந்த சூழலில் கடந்த 21ஆம் தேதி முதல் சுய விருப்பத்தின் பேரில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Kolkata Schools Reopen


இது வழக்கமான வகுப்புகளாக இருக்காது என்றும், ஆசிரியர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பள்ளிகள் எப்போது வழக்கமான முறையில் இயங்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் இன்று இரவு நிலவரப்படி 2,44,240 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,13,975 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 4,721 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்கூல் முடிச்சா ரூ.20 ஆயிரம்; காலேஜ் முடிச்சா ரூ.50 ஆயிரம் - மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்!

25,544 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். 30.6 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில் வரும் நவம்பர் முதல் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு கொல்கத்தா நகரில் உள்ள தனியார் பள்ளிகள் பலவும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

அதாவது, பூஜை விடுமுறைகளைத் தொடர்ந்து பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் நவம்பரில் நிலைமை மாறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி