ஆப்நகரம்

நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வரும் கொல்கத்தா போலீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத் தண்டனை பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வருகின்றனர்.

TNN 10 May 2017, 9:22 am
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத் தண்டனை பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வருகின்றனர்.
Samayam Tamil kolkata police will come to chennai for arrest judge karnan
நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வரும் கொல்கத்தா போலீஸ்


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதற்கிடையில் நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் மனநிலை பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தராததை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி கர்ணன் தற்போது சென்னையில் உள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வருகின்றனர்.

Kolkata police will come to Chennai for arrest Judge Karnan.

அடுத்த செய்தி