ஆப்நகரம்

30 வயது பெண், சோதனையில் தான் ஆண் எனத் தெரிந்து கொண்டார்...

கல்கத்தாவில் வயிற்று வலியோடு மருத்துவமனைக்குச் சென்ற திருமணம் முடித்த 30 வயது பெண்ணை சோதித்தபோது மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்...

Samayam Tamil 27 Jun 2020, 11:27 am
புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 வயது பெண்ணை மருத்துவர்கள் சோதித்தபோது அவர் உடலுக்குள் விரை இருந்ததும், பெண் உறுப்போடு காணப்படும் ஆண் என்பது என்பது தெரியவந்தது. குறித்த நபருக்கு மருத்துவர்கள் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Samayam Tamil 30 வயது பெண், சோதனையில் தான் ஆண் எனத் தெரிந்து கொண்டார்...
30 வயது பெண், சோதனையில் தான் ஆண் எனத் தெரிந்து கொண்டார்...


மேற்கு வங்காளம் பிர்பூம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்குத் திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. சமீப நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட நபர் கடுமையான வயிற்று வழி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள், அவரை முழு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பரிசோதனையில் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான அடையாளம் கண்டறியப்பட்டது. அதன்படி அவர் சிறுநீரக உறுப்பு பெண்களுக்கு இருப்பதைப் போல் இருந்தாலும், உடலளவில் அவர் ஆண் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து அந்த நபருக்குப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் அனுபாம் துட்டா கூறுகையில், “தோற்றத்தின்படி அவர் ஒரு பெண். அவர் குரல், மார்பு, அனைத்தும் பெண்களைப் போலவே உள்ளது. ஆனால் அவர் உடலில் கர்ப்பப் பை, சூல்பை இல்லை. அதேபோல் இதுவரை அவருக்கு மாதவிடாய் ஒருமுறைகூட ஏற்படவில்லை” என்றார்.

இது மிக அரிதான பிறப்பு எனக் கூறும் மருத்துவர்கள். 22 ஆயிரம் பேரில் ஒருவர் இப்படி இருக்கக் கூடும் என்றும் கூறுகிறார்கள்.

கிடைச்சது இரண்டு கற்கள், அடிச்சது யோகம்... ஒரே இரவில் கோடீஸ்வரரான தொழிலாளி...

இதற்கிடையே, அந்த நபருக்கு நடந்த தொடர் பரிசோதனையில் அவர் விரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இப்போது அந்த நபருக்குப் புற்றுநோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அந்த நபரின் கணவரிடம் எடுத்துக் கூறிய மருத்துவர்கள், தாம்பத்திய வாழ்க்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

தாய் வயிற்றில் கருவாக இருந்தபோது விரைப்பை வளர்ந்து வெளியே வராமல் உடலிலே தங்கிவிட்டதன் காரணமாக அவர் தோற்றத்தில் பெண்ணாக உள்ளார். இயற்கையாக நிகழ்ந்த இந்த மாற்றம் காரணமாக அந்த நபரின் ஆண் ஹார்மோன்கள் வெளிப்படவில்லை. பதிலாக பெண் ஹார்மோன் ஆற்றல் அதிகம் பெற்றதால் மார்பு உள்ளிட்டவை தோன்றியுள்ளது.

அடுத்த செய்தி