ஆப்நகரம்

கோழிக்கோடு விமான விபத்து: உயரும் பலி எண்ணிக்கை!

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Samayam Tamil 8 Aug 2020, 7:19 am
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் விமான விபத்துக்கும் இது வழி வகுத்துள்ளது.
Samayam Tamil air india express


துபாயிலிருந்து கேரளா கோழிக்கோடு விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு துண்டாக உடைந்தது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக துபாயில் சிக்கியிருந்த 184 பேரை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கேரளா அழைத்து வந்த விமானம் இதுவாகும். இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானி, 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

பயணிகளுடன் இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்!

விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்கிய போது எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், “மீட்புப் பணிகளை அனைத்து துறையினரும் இணைந்து மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என அனைத்து துறையினருக்கும் கோரிக்கை வைத்திருந்தார். கோழிக்கோடு, மலப்புரம் ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.

விமான விபத்து: அதிர்ச்சியில் பினராயி, பலி எண்ணிக்கை உயர்வு... விபத்தில் 3 தமிழர்கள்!

விமானத்திலிருந்தவர்களை தீவிரமாக நடைபெற்றது. இரவு 11 மணியளவில் மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி