ஆப்நகரம்

பெங்களூரு டூ தமிழ்நாடு போகணுமா? பஸ்ஸு விட்டாச்சு பாஸ் - ஆனா ஒரு கண்டிஷன்!

தமிழகத்திற்கு பேருந்து சேவையை KSRTC போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 12:09 pm
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மாநிலங்களுக்கு உள்ளே மட்டும் போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு செல்ல பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படவில்லை. இதேபோன்ற நிலை தான் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கும் பொருந்தும். கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளிக்கு வரை பேருந்து சேவை இருக்கிறது.
Samayam Tamil KSRTC Bus Service


நாள்தோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பயணிகள் வரை அத்திப்பள்ளிக்கு பயணிக்கின்றனர். இதையொட்டி 70 முதல் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து ஆட்டோ மூலம் ஒசூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்வதற்கும் பேருந்து சேவை இருக்கிறது. இது பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 11) முதல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு KSRTC பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் இருந்து ஒசூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; இனிமே கவலையில்லை!

இன்று (நவம்பர் 12) முதல் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளியை ஒட்டி வெளிமாநிலங்களில் இருந்து பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

இதன் தொடர்ச்சியாக கர்நாடக அரசு பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இது தீபாவளி சிறப்பு சேவையாக வரும் 16ஆம் தேதி வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி