ஆப்நகரம்

ஜம்மு – காஷ்மீரில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் பலி

ஜம்மு – காஷ்மீா் மாநிலத்தின் குல்காம் பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்ட நபா்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் கொலை செய்யப்பட்டனா்.

Samayam Tamil 7 Jul 2018, 4:59 pm
ஜம்மு – காஷ்மீா் மாநிலத்தின் குல்காம் பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்ட நபா்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் கொலை செய்யப்பட்டனா்.
Samayam Tamil Jammu and Kashmir Police


ஜம்மு – காஷ்மீா் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ரெட்வானி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரா்களின் வாகனம் மீது இன்று காலை சிலா் திடீரென கற்களை கொண்டு தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனா். இதனைத் தொடா்ந்து கல்வீச்சாளா்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினா் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுமி உள்பட 3 போ் பலியாகி உள்ளனா். துப்பாக்கிச்சூட்டில் பலியான 3 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைவரும் குல்காமில் உள்ள ஹவூரா பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று தொியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வதந்திகள் மற்றும் போராட்டங்கள் பரவாமல் இருக்க குல்காம், அனந்தநாக் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி