ஆப்நகரம்

லாலு பிரசாத் யாதவிற்கு தொடர் சிகிச்சை: மும்பை மருத்துவமனையில் அனுமதி

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தொடர் சிகிச்சைக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 23 May 2018, 7:17 pm
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தொடர் சிகிச்சைக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil lalu-admitted-in-hospital
லாலு பிரசாத் யாதவிற்கு மும்பையில் தொடர் சிகிச்சை


பீகார் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது, கால்நடை தீவனம் ஊழலில் 3 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்தார் லல்லு பிரசாத் யாதவ்.

ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி, மருத்துவ சிகிச்சைக்காக 6 வார கால பிணையில் லாலு பிரசாத் யாதவ் வெளியே வந்தார்.

சிகிச்சை பெற்று வந்த சில தினங்களிலேயே, அவரது உடல்நிலை மோசமடையை பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு, ஒவ்வாமை, மூச்சுதிணறல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் அவை எதுவும் போதுமானதாக இல்லை.

இந்நிலையில் லாலு பிரசாத் முன்னர் இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட மும்பை தனியார் மருத்துவமனைக்கு பாட்னாவில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் கொண்டுவரப்பட்டார்.

இன்று பிற்பகலில் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள லாலுவிற்கு அறுகை சிகிச்சை நிபுணர், முட நீக்கியல் துறை நிபுணர், நீரிழிவு துறை நிபுணர் மற்றும் இதயவிய நிபுணர் ஆகியோர் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி