ஆப்நகரம்

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும் லாலு குற்றவாளி!

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jan 2018, 2:25 pm
பாட்னா: மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil lalu prasad yadav found guilty jagannath mishra also convicted
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும் லாலு குற்றவாளி!


கடந்த 1992-93ல் பீகார் முதலமைச்சராக இருந்த போது, மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் 76 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் 14 பேர் விசாரணையின் போது மரணமடைந்தனர்.

3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். மீதமுள்ள 56 பேர் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

லாலு மீதான முதல் இரண்டு வழக்குகளில் 5 மற்றும் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லாலு மீதான 3வது வழக்கில், சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் லாலு, ஜனந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Third fodder scam case: Lalu Prasad Yadav found guilty, Jagannath Mishra also convicted.

அடுத்த செய்தி