ஆப்நகரம்

லாலு பிரசாத் யாதவ் மீதான மற்றொரு வழக்கு இன்று தீர்ப்பு

லாலு பிரசாத் யாதவ் மீதான மற்றொரு வழக்கு மாட்டுத் தீவன வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Samayam Tamil 24 Jan 2018, 10:32 am
லாலு பிரசாத் யாதவ் மீதான மற்றொரு வழக்கு மாட்டுத் தீவன வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
Samayam Tamil lalu yadav case of fodder scam the verdict given by cbi special court
லாலு பிரசாத் யாதவ் மீதான மற்றொரு வழக்கு இன்று தீர்ப்பு


1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் ரூ.950 கோடியை லாலு பிரசாத் யாதவ் ஊழல் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் உற்பட 76 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே 14 பேர் மரணமடைந்தனர். இதில் மூன்று பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர் . ஏற்கனவே மாட்டு தீவன ஊழல் தொடர்பான ஒரு வழக்கில் ஜனவரி 6 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக ராஞ்சி உயர்நீதிமன்றத்தில் லாலு மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் மற்றொரு வழக்கு மாட்டுத் தீவன வழக்கின் தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் வழங்க உள்ளது.

அடுத்த செய்தி