ஆப்நகரம்

திடீரென செத்து விழுந்த வௌவால்கள்; பேராபத்தின் அறிகுறியா? - பொதுமக்கள் அச்சம்!

பெல்காட் பகுதியில் ஏராளமான வௌவால்கள் செத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 27 May 2020, 11:22 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த வைரஸ் தொற்று பரவ வௌவால்கள் பின்னணியில் இருந்ததாக சொல்லப்படுகின்றன. எனவே சமீப காலமாக வௌவால்களை கண்டாலே தப்பியோடும் நிகழ்வுகளை காண முடிகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே பெல்காட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வௌவால்கள் செத்து விழுந்துள்ளன. இதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது ஆபத்தின் அறிகுறியா இருக்குமா என்று முதியவர்கள் அச்சப்படுகின்றனர். இதுபற்றி வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
Samayam Tamil வௌவால்கள் மரணம்


இதுதொடர்பாக பெல்காட் பகுதியை சேர்ந்த பங்கஞ் ஷாஹி என்பவர் கூறுகையில், நேற்று காலை மாமரத்தின் கீழே ஏராளமான வௌவால்கள் செத்து விழுந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே ஊர் பெரியவர்களிடமும், பொதுமக்களிடமும் கூறினேன்.

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசின் திட்டம் என்ன?

சில காலம் முன்பு வரை பழமையான மரம் ஒன்றில் வௌவால்கள் நீண்ட காலமாக வசித்து வந்தன. சில மாதங்களுக்கு முன்பு மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. இதையடுத்து அந்த மரத்தில் இருந்த வௌவால்கள் அனைத்தும் மாமரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டன.

நாங்கள் தகவல் கொடுத்ததை அடுத்து வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் வௌவால்களை எடுத்து ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக வௌவால்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புண்டு என்று வனத்துறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்.

எனவே மரங்களில் போதிய தண்ணீர் விடுமாறு அறிவுறுத்தினர். அந்த தோட்டத்திற்கு அருகே செங்கல் சூளை இருக்கிறது என்று கூறினார். இதையடுத்து காஞ்னி வனப்பகுதி காவலர் தேவேந்திர குமார் கூறுகையில், வௌவால்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள குளங்களில் போதிய தண்ணீர் இல்லை.

கொஞ்சம் ஆறுதல்; நிறைய ஷாக் - இந்தியாவில் கோவிட்-19 நிலவரம் தெரியுமா?

கோடை வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதி முழுவதும் மிகவும் வறண்டுள்ளது என்றார். மாவட்ட வனத்துறை அதிகாரி அவினாஷ் குமார் கூறுகையில், ஆய்வின் முடிவுகளுக்கு பின்னரே வௌவால்கள் இறந்ததற்கு உண்மையான காரணம் தெரிய வரும். காஞ்னி வனத்துறை காவலர், விலங்குகள் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதுவரை 52 வௌவால்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.வி.ஆர்.ஐ எனப்படும் ஆராய்ச்சி மையத்திற்கு வௌவால்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி