ஆப்நகரம்

மீண்டும் இந்தியாவை எச்சரிக்கும் நாசா! கடந்த 10 நாளில் மட்டும் நாடு முழுவதும் தீ!

புவி வெப்பமயமாதல், கோடை காலம் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் மட்டும் கடந்த 10 நாளில் பெருமளவிலான வயல்வெளிகள், காடுகள் தீப்பிடித்துள்ளதாக நாசா செயற்கைக்கோள் வரைபடம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 May 2018, 6:30 pm
புவி வெப்பமயமாதல், கோடை காலம் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் மட்டும் கடந்த 10 நாளில் பெருமளவிலான வயல்வெளிகள், காடுகள் தீப்பிடித்துள்ளதாக நாசா செயற்கைக்கோள் வரைபடம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil nasa warning


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தற்போது, இந்தியாவின் செயற்கைக்கோள் வரைபடத்தை காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடந்த 10 நாளில் மட்டும் நாட்டின் பெரும்பான்மையான இடத்தில் தீ பிடித்துள்ளது. புவி வெப்பமயமாதல், கோடைகாலம், போன்ற காரணங்களால், தென்மாநிலங்கள் உட்பட மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் என நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ள மலைப்பகுதிகள், காடுகள், வயல்வெளிகளில் தீ பிடித்துள்ளது.

குறிப்பாக வயல்வெளிகளில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக நாடு முழுவதிலும் 14% அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும், இது மிகப்பெரிய இயற்கை பேரிடருக்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகையால் அளவுக்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, குரங்கணி காட்டுத்தீ ஏற்படுவதற்கு முன்பு, நாசா நிறுவனம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி