ஆப்நகரம்

பாக்., உதவியுடன் இந்தியாவைத் தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டம்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏற்பாட்டில் காத்மண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்குவதாகவும் உளவுத்துறை கூறியிருக்கிறது.

Samayam Tamil 4 Nov 2018, 7:00 pm
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நேபாளத்தில் புதிய கிளையை திறந்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
Samayam Tamil terrorists-647_050417024854_0


இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகளை சேர்ப்பதற்காக அரசு சாரா இஸ்லாமிய தொண்டு நிறுவனம் எனக் கூறிக்கொண்டு புதிய அமைப்பு நேபாளத்தில் பிரட்நகரில் தொடங்கப்பட்டுள்ளது என இந்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் அங்கு சென்று வந்திருக்கின்றனர் எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏற்பாட்டில் காத்மண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்குவதாகவும் உளவுத்துறை கூறியிருக்கிறது.

இதேபோல வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக உதவியுடன் பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது என்று உளவுத்துறைக்குத் தெரியவந்திருக்கிறது.

அடுத்த செய்தி