ஆப்நகரம்

2ஜி வழக்கில் மேல்முறையீடு: சிபிஐக்கு சட்ட அமைச்சகம் அனுமதி

2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2018, 1:46 pm
டெல்லி: 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil law ministry approves cbi request to appeal in 2g scam case
2ஜி வழக்கில் மேல்முறையீடு: சிபிஐக்கு சட்ட அமைச்சகம் அனுமதி


2007ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டின் மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் தீர்ப்பு தேதி அறிவிப்பு தொடர்ந்து ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 5ஆம் தேதி டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

டெல்லி பட்டியாலா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், முக்கிய குற்றவாளிகளான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றம்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் ஒ.பி.ஷைனி தெரிவித்தார்.

இதனை எதிர்த்து சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் படி, மத்திய சட்ட அமைச்சகத்திடம் மேல்முறையீட்டுக்கான அனுமதியை சிபிஐ கோரியது.

இன்று மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் 2ஜி வழக்கில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

2ஜி ஊழல் குற்றச்சாட்டு பற்றிய ஆங்கில நூல் (2G Saga Unfolds) இன்று மாலை வெளியாவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி