ஆப்நகரம்

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்காக தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வைகோ, ஸ்டாலின், மெஹபூபா முஃக்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு கண்டத்தை பதிவு செய்துள்ளனர். தலைவர்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குறித்து விரிவாகப் பார்ப்போமா?

Samayam Tamil 5 Aug 2019, 2:56 pm
எமெர்ஜென்சி மீண்டும் வந்திருக்கிறது என மாநிலங்கள் அவை உறுப்பினர் வைகோ தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு இது எமர்ஜென்ஸி இல்லை அர்ஜென்ஸி எனக் கூறி விளக்கம் அளித்தார்.
Samayam Tamil vaiko 234

ஜம்மு காஷ்மீர், லடாக் என பிரிக்கப்பட்டதால் யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நாள் இந்தியாவுக்கு கறுப்பு தினம் எனவும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கருத்து தெரிவிக்கையில், ’இனி இந்திய அரசால் காஷ்மீரின் எல்லைகளை மாற்றி அமைக்க முடியும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இட இதுக்கீடு வழங்கமுடியும். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆணை மணந்துகொண்டால் அந்த பெண்ணின் ஜம்மு காஷ்மீர் சொத்துக்கள் பறிக்கப்படும் என்ற நிலை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Kashmir Latest News: காஷ்மீர் விவகாரத்தில் கொந்தளிப்பு; நாட்டின் தலையை வெட்டி எறிந்துவிட்டனர் - எதிர்க்கட்சிகள்!

மேலும் காஷ்மீரில் உள்ள ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜனநாயகப்
படுகொலையை அரங்கேற்றி விட்டனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதால் ஏற்படவுள்ள நன்மைகள், தீமைகள் என்னென்ன?

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு
விளையாடிவிட்டனர். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல் என மாநிலங்கள் அவை உறுப்பினர் வைகோ தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிஜு ஜனதாதளம், அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பூகோளம், வரலாறு ஆகிய ரீதியில் தனித்தன்மையுடன் விளங்கிய காஷ்மீர் பகுதியை மத்திய பாஜக அரசு அதன் சுயநலத்துக்காக பயன்படுத்திவிட்டது. இதனை எதிர்த்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவோம் என்றார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசியுள்ளார்.

அடுத்த செய்தி