ஆப்நகரம்

இறந்ததாக கூறிய மாணவனுக்கு விடுப்பு அளித்த பள்ளி.! சர்ச்சை ''லீவ் லட்டர்''..

நான் இறந்து விட்டேன் எனக்கு விடுப்பை தாருங்கள் என்று எட்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர் கொடுத்த லீவ் லட்டரை ஏற்றுக்கொண்ட பள்ளியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Sep 2019, 9:30 am
உத்திரபிரதேசம், கான்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விடுமுறை வேண்டி பள்ளி முதல்வரிடம் விடுப்பு விண்ணப்பத்தை வழங்கியுள்ளார். அதில் நான் இறந்துவிட்டதால் தயவு கூர்ந்து விடுப்பு அளியுங்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
Samayam Tamil 02


இன்னும் நெருங்கிய சந்திரயான் 2- நிலவில் இறங்க ரெடி; இறுதிக் கட்டப் பாதையில் வெற்றி!

ஆனால், உண்மையில் சம்மந்தப்பட்ட மாணவரின் பாட்டி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவர் அரை நாள் விடுமுறை பெற லீவ் லட்டரை அளித்துள்ளார். கவனக்குறைவால் பாட்டி இறந்துவிட்டார் என்பதற்கு பதிலாக, ''நான் இறந்த விட்டேன்'' என்று எழுதியிருக்கிறார்.

யார் அந்த புதிய ஆளுநர்கள்? - 5 மாநிலங்களுக்கு நியமனம் செய்து உத்தரவிட்ட குடியரசுத் தலைவர்!

இந்த பிழையை கவனிக்காத பள்ளி முதல்வர், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மாணவனுக்கு விடுப்பை அளித்துள்ளார். இந்த லீவ் லட்டர் சம்பவம் வெளியில் கசிந்து பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி