ஆப்நகரம்

சபரிமலை பக்தர்கள் பக்கம் பாஜக பாறை போல நிற்கிறது: அமித் ஷா

சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று நடக்கும் நாராயணகுரு பூஜையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அவர், இன்று கேரளாவில் அரசுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் இடையே பயங்கரமான போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

Samayam Tamil 27 Oct 2018, 4:57 pm
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது பற்றிய விவகாரத்தில் போராட்டக்காரர்களின் பக்கம் பாஜக இருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Amit-Shah meeting


சபரிமலை விவகாரத்தில் பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமித்ஷா கேரளா சென்றார்.

சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று நடக்கும் நாராயணகுரு பூஜையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அவர், இன்று கேரளாவில் அரசுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் இடையே பயங்கரமான போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
“நம் நாட்டுக் கோயில்களில் விதவிதமான பழக்கவழக்கங்கள் உள்ளன. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதைப் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலையின் புனிதத்தைக் காப்பாற்றுவதில் பாஜக பக்தர்கள் பக்கம் பாறைபோல் நிற்கிறது என்பதை கேரளாவின் இடதுசாரி அரசுக்கு ஓர் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி