ஆப்நகரம்

இ-விதான் திட்டம் மூலம் சட்டப்பேரவைகள் டிஜிட்டல் மயம்

நாட்டில் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளையும் டிஜிட்டம் மயம் ஆக்கும் இ விதான் திட்டத்தை மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jan 2018, 4:51 pm
நாட்டில் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளையும் டிஜிட்டம் மயம் ஆக்கும் இ விதான் திட்டத்தை மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்துள்ளார்.
Samayam Tamil legislative assemblies councils to become paperless in five years says government
இ-விதான் திட்டம் மூலம் சட்டப்பேரவைகள் டிஜிட்டல் மயம்


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார், அடுத்த 5 ஆண்டுகளில் இ விதான் திட்டம் மூலம் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளில் காகிதப் பயன்பாடு இல்லாத வகையில், டிஜிட்டம் மயம் ஆக்கப்படும் என்று தெரிவித்தார்.

சில மாநிலங்களில் தானியங்கி நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில மாநிலங்களில் இன்னும் காகித பயன்பாடே அதிகமாக உள்ளது. என்று அமைச்சர் கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் இதன் மூலம் வெளிப்படையானவையாக இருக்கும் என்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு தீமை விளைவிக்காத பசுமைத் திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி