ஆப்நகரம்

இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்...லெப்டினண்ட் கர்னல் ஜோதி ஷர்மா ...

இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முதல்முறையாக இந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனராலாக லெப்டினண்ட் கர்னல் ஜோதி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 14 Nov 2019, 2:34 pm
இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முதல்முறையாக இந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனராலாக லெப்டினண்ட் கர்னல் ஜோதி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil leuitinanat colonel


இவர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சிஷெல்ஸ் நாட்டின் சட்ட நிபுணராக இனி செயல்படுவார் என்றும் இனி இவர் வெளியுறவு சார்ந்த விவாகரங்கள் குறித்த வழக்குகளைக் கையாளுவார் என்றும் இந்திய ராணுவத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்வகேட் ஜெனரல் என்றால் யார்:
பொதுவாக இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை மேஜர் ஜெனரலாக இருப்பவருக்கே அட்வகேட் ஜெனரல் எனப்படும் நீதிபதி பதவி வழங்கப்படும். இந்த அட்வகேட் ஜெனரல்தான் இந்திய ராணுவத்தின் சட்டம் மற்றும் நீதித்துறையின் தலைமையாக இருப்பார். ராணுவத்துக்கு தேவைப்படும் எந்த விதமான சட்டப்பூர்வ உதவியும் அட்வகேட் ஜெனரலின் குழுவின் மூலமே வழங்கப்படும்.

ராகுல் காந்திக்கு அட்வைஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்!

இந்த பதவிக்குத்தான் தற்போது லெப்டினன்ட் கர்னல் ஜோதி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் சாதித்து வருவது போலவே இராணுவத் துறையிலும் உச்சமான ஒரு தலைமைப் பதவி வரை உயர்ந்து வந்திருப்பதை மக்கள் வெகுவாக வரவேற்று வருகின்றனர்.


இந்திய ராணுவத்தின் JAG (Judge Advocate General ) ஜட்ஜ் அட்வகேட் ஜெனரலின் கவனத்துக்குட்பட்டே அன்றாட சட்ட நகர்வுகள் ஒவ்வொன்று நடக்க வேண்டும் என்பது ராணுவ விதிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி