ஆப்நகரம்

பிரதமர் சொன்னாரு விளக்கேத்தினோம்... மற்றபடி இது பயனற்றதுதான்

“தான் சொன்னால் எதையும் செய்வார்கள் என் மக்கள்” என்று தன் செல்வாக்கைக் காட்டி, உலக அரங்கில் இனி பிரதமர் தைரியமாக மார்தட்டிக்கொள்ளலாம். ஆனால்,

Samayam Tamil 6 Apr 2020, 10:57 am
பிரதமரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நேற்று (ஏப்ரல் 5ஆம் தேதி ) 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றிய புதுச்சேரி முதல்வர், இப்படி விளக்கு ஏற்றுவதாலும் கை தட்டுவதாலும் ஏதும் சாதித்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil lightened yesterday but it is a waste idea pondy cm v narayanasamy
பிரதமர் சொன்னாரு விளக்கேத்தினோம்... மற்றபடி இது பயனற்றதுதான்


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியது இங்கு கவனிக்கப்ப்பட வேண்டியது. அவர் தெரிவித்து இதுதான் “பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நானும் புதுச்சேரி மக்களும் ஒற்றுமையைக் காட்டியுள்ளார்கள். நாட்டு மக்கள் அனைவரும் தேசபக்தியுடன் ஒற்றுமையாக உள்ளார்கள்‌.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிக்க வேண்டும். நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு உள்ளது. விளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ இந்த நோய்க்கு தீர்வு காண முடியாது. நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டியதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விளக்கு ஏற்றுவது என்பது எந்தவொரு குடிநபருக்குமான தனி விருப்பம். ஆனால், நாட்டு மக்கள் தேசபக்தியுடன் இருப்பதற்கும் விளக்கு ஏற்றுதலுக்கும் துளித் தொடர்பும் இல்லை என்பதே நிலையான உண்மை. மேலும், தேசபக்திக்கான வரையறை என்பது சொன்னதை அப்படியே கீழ்ப்படிதல் என்பதில் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இதனால் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லும் புதுச்சேரி முதல்வர், பிரதமர் சொல்லிவிட்டார் என்பதற்காக விளக்கேற்றினோம் என்றும் சொல்கிறார். பிரதமர் சொல்லிவிட்டார் என்பதற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்னும் கட்டாயம் எந்தவொரு இந்தியக் குடிநபருக்கும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதல்முறை ஒரு காரணத்தைச் சொல்லிக் கைதட்டச் சொன்னபோது (சேவையாற்றுவோரைப் பாராட்டும் விதமாக) கூட்டங்கூட்டமாக அதை நிறைவேற்றிய மக்கள், இந்த முறை காரணமே சொல்லாமல் விளக்கணைக்கவும், விளக்கேற்றவும் சொன்னாலும் செய்கிறார்கள் (9 மணிக்கு பிரதமர் பேசிய பேச்சில் விளக்கேற்றுங்கள் என்றுதான் சொன்னாரே ஒழிய, ஏன் விளக்கேற்ற வேண்டும் என்ற காரணம் ஏதும் சொல்லவில்லை).

டார்ச் அடிச்சா என்ன நடக்கும்? சோதனை எலிகளா நாம்? - ஒரு பார்வை

அப்படியென்றால், “தான் சொன்னால் எதையும் செய்வார்கள் என் மக்கள்” என்று தன் செல்வாக்கைக் காட்டி, உலக அரங்கில் இனி பிரதமர் தைரியமாக மார்தட்டிக்கொள்ளலாம்.

ஆனால், பயனற்றது என்று தெரிந்தும் பிரதமர் சொல்லிவிட்டார் என்பதற்காக பிரதமர் கேட்டதைச் செய்யும் மக்களுக்கு, இந்தக் கொரோனா தடுப்பு விவகாரத்தில் பிரதமர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அடுத்த செய்தி