ஆப்நகரம்

மக்கள் நலனில் அக்கறை இல்லையா? அரசுக்கு உச்சநீதிமன்றம் புத்திமதி

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு இடையேயான தொலைவைக் குறைக்குமாறு வேண்டிய மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புத்திமதி கூறியுள்ளது.

TNN 29 Mar 2017, 5:54 pm
டெல்லி: நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு இடையேயான தொலைவைக் குறைக்குமாறு வேண்டிய மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புத்திமதி கூறியுள்ளது.
Samayam Tamil liquor ban on national highways case center and state asked to reduce the distance
மக்கள் நலனில் அக்கறை இல்லையா? அரசுக்கு உச்சநீதிமன்றம் புத்திமதி


உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு இடையேயான குறைந்தபட்ச தொலைவு 500 மீட்டர் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 500 மீட்டர் இடைவெளிக்குக் குறைவான தொலைவில் உள்ள மதுக்கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்படக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு இடையேயான குறைந்தபட்ச தொலைவைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், மக்களின் நலனைக் காட்டிலும் மதுக்கடைகள் அரசுக்கு முக்கியமாகிவிட்டதா? என்று கேள்வி எழுப்பி புத்திமதி சொல்லி வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது.

அடுத்த செய்தி