ஆப்நகரம்

சாப்பாடு பொட்டலத்துடன் சரக்கு பாட்டில் கொடுத்த பாஜக தலைவர் நரேஷ் அகர்வால்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் நடந்த கோயில் நிகழ்ச்சியின் போது சாப்பாடு பொட்டலத்துடன் சரக்கு பாட்டிலும் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2019, 8:07 am
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் நடந்த கோயில் நிகழ்ச்சியின் போது சாப்பாடு பொட்டலத்துடன் சரக்கு பாட்டிலும் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bjp


உத்தரப்பிரதேச மாநிலம், ஷ்ரவன் தேவி கோயிலில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் பாசி சமூகத்தினரின் சம்மேளனம் (கூட்டம்) நடந்தது. அதில், விவசாயிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, அவர்களுக்கு சாப்பாடு பொட்டலத்துடன் கூடிய சரக்கு பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை திறந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளுடன் அவர்களது சிறு வயது மகன்களுக்கும் இந்த உணவு பொட்டலுத்துடன் கூடிய சரக்கு பாட்டிலும் கொடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் ஒருவர் கூறுகையில், நரேஷ் அகர்வால் நடத்திய இந்த நிகழ்ச்சியில் உணவு பொட்டலுத்துடன் சரக்கு பாட்டிலும் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து பாஜகச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அன்சுல் வர்மா கூறுகையில், நரேஷ் அகர்வால் நடத்திய கோயில் நிகழ்ச்சியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது கண்டனத்திற்குரியது.

அண்மையில், நரேஷ் அகர்வால் மற்றும் அவரது மகன் நிதின் இருவரும் கட்சியில் இணைந்தனர். நரேஷ் அகர்வால் நடத்திய இந்த நிகழ்ச்சி திடீரென்று நடத்தப்பட்ட ஒன்று. பொதுவாக சிறியவர்களுக்கு பேனா மற்றும் காப்பி மட்டுமே கொடுப்பது வழக்கம். ஆனால், நரேஷ் அகர்வால் சரக்கு பாட்டில் கொடுத்துள்ளார்.

இதற்குரிய அதிகாரிகள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். எப்படி சரக்கு பாட்டில் கொடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி