ஆப்நகரம்

சரக்கு தாறுமாறு: மகிழ்ச்சியில் தவழும் கேரள அரசு

கேரளாவில் ஓணம் திருவிழாவின்போது மது விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளது...

Samayam Tamil 13 Sep 2019, 8:49 am
கேரளாவில் ஓணம் திருவிழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழாவுக்காகக் கேரளாவில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு வாரம் விடுமுறை அளித்துவிடும். மதங்கள், சாதிப் பிரிவினைகள் இவை அனைத்தையும் கடந்து ஊரே ஒன்று கூடி ஓணத்தைக் கொண்டாடுவதுதான் இதன் தனிச் சிறப்பே.
Samayam Tamil liquorshop


இந்நிலையில், இந்த ஆண்டு ஓணம் திருவிழாவுக்கான விடுமுறை செப். 9ஆம் தேதி தொடங்கியது. கொண்டாட்டங்கள் கலை கட்டிய அதே வேலையில், மது விற்பனையும் எதிர்பார்க்காத உச்சத்துக்குச் சென்றுவிட்டது. ஓணம் பண்டிகை காலத்தில் மது விற்பனை குறித்து கேரள அரசு மதுபானங்கள் ஆணையம் தகவல் ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, செப். 3ஆம் தேதியில் இருந்து செப். 10ஆம் தேதி(7 நாட்கள்) வரை மட்டும் கேரள அரசால் ரூ. 487 கோடிக்கு மாநிலம் முழுவதிலும் மது விற்பனை நடந்துள்ளது. ஓணம் திருவிழா விடுமுறைக் காலம் செப். 15 வரை இருக்கும் நிலையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டை பொறுத்தவரை ஓணம் திருவிழா காலகட்டத்தில் ரூ. 457 கோடியாக இருந்தது. எனினும், இந்த ஆண்டு திருவிழா விற்பனை இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுப் பாட்டில்களை வாங்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

குறிப்பிட்டுள்ள வாரத்தில் அதிகபட்ச விற்பனை செப். 10ஆம் தேதி, ஓணம் கொண்டாடப்பட்டபோது நடந்துள்ளது. அரசு கொடுத்த கணக்கின்படி அன்றைய தினத்தில், ரூ. 90.32 கோடிக்கு மது பாட்டில்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதற்கு மற்றொரு முக்கிய காரணம், மதுக் கடைகளுக்கு செப். 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அதிலும் திருச்சூரில் உள்ள ஒரு மதுக் கடையில் அதிகபட்சமாக ரூ. 1.44 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. அதிகம் மதுக்களை விற்ற பட்டியலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த மதுக்கடை ஒன்று 3வது இடத்தில் உள்ளது.

கேரளாவில் விசு, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் ஓணம் காலங்களில் மதுக்கள் அதிகம் விற்கப்படுவது வழக்கம்தான். ஆனால், ஆண்டுதோறும் ஒந்த விற்பனை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. கேரளாவில் 300 மதுபானக் கடைகளே நேரடி மது விற்பனையைச் செய்து வருகிறது. மற்றபடி, நட்சத்திரம பார்கள், போன்றவைதான் அதிகம் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

கேரளாவில் மது விற்பனையை ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1,200 உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. அதன்படி, இந்த ஆண்டு இதுவரை ரூ. 14, 508 கோடிக்கு மதுக்கள் விற்பனையாகியுள்ளது. சமீப நாட்களில் கேரளா, கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் பாதிப்படைந்து சிக்கித் தவித்தது. இப்போது நடக்கும் விற்பனை கேரள அரசுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி