ஆப்நகரம்

கேஸ் சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீவிபத்து

தெலுங்கானாவில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

TNN 15 Sep 2017, 12:37 am
தெலுங்கானாவில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் ஏறப்பட்ட தீவிபத்தில்
Samayam Tamil loads of gas cylinder explosion in telangana
கேஸ் சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீவிபத்து


தெலுங்கானா மாநிலம் செர்லாபள்ளியில் இந்துஸ்தான் பெட்ரோலியத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு, வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுநத்தால், அங்கிருந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு ஒடினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர், ஆறு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த எரிவாயு கிடங்கு அருகில் விமான நிலையம் உள்ளதால், அந்த பகுதி வழியாக வரும் விமானங்கள் மாற்று வழியில் தறையிறங்க அறிவுறித்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி