ஆப்நகரம்

lockdown: ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா

நாடு முழுக்க ஊரடங்கு நிலவி வந்த நிலையில், ஏப்ரல் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளது ஒடிசா அரசு.

Samayam Tamil 9 Apr 2020, 1:12 pm
நாடு முழுக்க ஊரடங்கு நிலவி வந்த நிலையில், ஏப்ரல் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளது ஒடிசா அரசு.
Samayam Tamil odisaa


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், மேலும் மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே ஒழிய குறையவில்லை.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது. அரசுத் தரப்பிலும் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்லது. ஆனால், நேரடியாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

ஊரடங்கு நீட்டிக்கப்படும். ஆனால், இறுதி முடிவு அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்த பின்னரே தெரிவிக்கப்படும் என்பது மட்டுமே இதுவரை வெளியான தகவலாக இருக்கும்பட்சத்தில் தற்போது ஒடிசா ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தன் மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்துள்ளது.


அத்துடன், விமான மற்றும் ரயில் சேவையையும் தொடங்க வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பயம்: ஊமத்தங்காயை தின்றவர்களுக்கு சிகிச்சை!

இந்நிலையில், அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் நிச்சயமாக ஊரடக்கு நீட்டிக்கபடும் என்ற பார்வையும் இந்தமூலம் வலுப்பெறுகிறது. எனினும் அரசுத் தரப்பில் இன்னும் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி