ஆப்நகரம்

அடுத்த ஊரடங்கு நீட்டிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ள தெலங்கானா!!

தெலங்கானாவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிக்க, அந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Apr 2020, 12:29 am
கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு முக்கிய நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3 ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Samayam Tamil telnagana cm


ஆனால், மோடி இதனை அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே, தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டித்து, அதாவது மே மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

15 மாநிலங்கள்... 25 மாவட்டங்களில் இப்போ யாருக்கும் கொரோனா இல்லையாம்!!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 'ஹாட்ஸ்பாட்' எனப்படும் 'ரெட் லைட்' பகுதிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் கடுமையான விதிமுறைகள் தொடரும் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குடியிருப்புகளின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் வாடகை வசூலிக்க கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி