ஆப்நகரம்

Lockdown: இந்தியாவில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் 4 கோடி!!

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் லாக் டவுனால் உள்நாட்டிற்குள் புலம் பெயர்ந்து பணியாற்றி வந்த 4 கோடி தொழிலார்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Apr 2020, 1:46 pm
லாக்டவுன் காரணமாக இந்தியாவில் 4 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
Samayam Tamil இந்தியாவில் புலம் பெயரும் தொழிலாளர்கள்


இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்தியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் இதுவரை புலம் பெயர்ந்து தொழிலில் ஈடுபட்டு இருந்த 4 கோடி பேர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சொந்த இடங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். 50,000 முதல் 60,000 பேர் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்த இடம் பெயர்தலை சர்வதேசத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இரண்டரை சதவீதம் அதிகம். லாக் டவுன், பணியிழப்பு, சமூக இடைவெளி ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். லத்தீன் அமெரிக்காவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

இதற்காக கேரளா அரசு ஊழியர்களை மனதார பாராட்ட வேண்டும்!!

இவ்வாறு புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியம், நிதி நிலைமை, மற்ற சமூக திட்டங்கள் ஆகியவற்றை அரசு சமாளிக்க வேண்டும்.

Coronavirus Karnataka: இந்த சேவைகளுக்கு அனுமதி- ஊரடங்கில் சலுகை; கர்நாடகாவில் இன்று முதல் அமலாகிறது!

தென் ஆசியா பகுதியில் லாக் டவுன் பெரிய அளவில் மக்களை பாதித்து இருக்கிறது. சர்வதேச அளவில் வளைகுடா நாடுகளில் இருந்து வங்கதேசம், பாகிஸ்தானுக்கு மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். புலம் பெயர்ந்து பணியில் இருந்தவர்களை சீனா, ஈரான் போன்ற நாடுகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளன.

ஆரோக்ய சேது செயலிக்கு பில்கேட்ஸ் பாராட்டு!

பல்வேறு நாடுகளில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சிக்கு அதிக நிதியை அரசுகள் ஒதுக்கி தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி