ஆப்நகரம்

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் முடியவுள்ள நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 28 Jul 2020, 6:32 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம், நாடு முழுவதும் ஆறாம் கட்டமாக வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் UNLOCK செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலின் இதனை பின்பற்றி வரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்து வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், 6ஆம் கட்ட பொது முடக்கம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதற்கு பின்னர் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை இதற்கு மேல் பொது முடக்கம் கிடையாது என்பதை உறுதியாக சொல்லி விடலாம். அப்படியே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும், UNLOCK செயல்முறையின் அடிப்படையில் மேலும் சில தளர்வுகள்தான் அளிக்கப்படும்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வாரத்துக்கு இரண்டு நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியாவுல எல்லாம் மழை வெளுத்து வாங்கப் போகுதாம்!!

முன்னதாக, கொரோனாவை தடுக்க ஊரடங்கு கை கொடுக்காது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, அம்மாநிலம் முழுவதும் பொது முடக்கத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் கொரோனாவால் 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,411 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி