ஆப்நகரம்

தோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் – தோ்தல் ஆணையம்

விவிபேட் இயந்திரங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கவேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தோ்தல் முடிவுகளை வெளியிடுவதல் காலதாமதம் ஏற்படும் என்று தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 22 May 2019, 5:17 pm
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 விவிபேட் இயந்திரங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தோ்தல் முடிவுகளை வெளியிடுவதல் காலதாமதம் ஏற்படும் என்று தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Election Commission of India


மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், எதிா்க்கட்சிகள் சாா்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதன்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டு பாா்க்கவேண்டும் என்று தொிவிக்கப்பட்டது. இதற்கு தோ்தல் ஆணையம் எதிா்ப்பு தொிவித்தது.

வழக்கின் முடிவில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5 விவிபேட் இயந்திரங்களை எடுத்து அவற்றை வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு மக்களைவத் தொகுதியிலும், 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 20 ஆயிரம் விவிபேட் இயந்திரங்களை ஒப்பிட்டு பாா்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் வழக்கத்தை விட காலதாமதம் ஏற்படும் என்று தோ்தல் ஆணையம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 5 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்படலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி