ஆப்நகரம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: புதிய தண்டனை என்ன தெரியுமா?

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு இனி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியுள்ளது.

Samayam Tamil 31 Jul 2018, 10:56 am
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு இனி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியுள்ளது.
Samayam Tamil POCSO-Act-Apr-28-780x405


நாடு முழுவதும் அதிகரித்துள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எதிரொலியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்தது. இதற்கான அவசரச் சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் இயற்றப்பட்டது.

இதனையடுத்து, திங்கட்கிழமை மக்களவைக் கூட்டத்தில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க இடமளிக்கும் புதிய சட்டதிருத்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்பதலும் பெற்ற பிறகு முழுமையாக அமலாகும்.

இச்சட்டதிருத்தத்தின் முக்கிய அம்சங்கள்

அடுத்த செய்தி