ஆப்நகரம்

ஹனுமன் ஒரு தலித் அல்ல; அவர் ஒரு பழங்குடி - சர்ச்சையை கிளப்பும் எஸ்.டி ஆணைய தலைவர்!

லக்னோ: ஹனுமானை வைத்து புதிய சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

TIMESOFINDIA.COM 30 Nov 2018, 11:35 am
ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil Nand Kumar Sai


இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரச்சாரத்திற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். அங்கு கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ஹனுமன் ஒரு காட்டுவாசி. அவர் ஒரு தலித்.

ராமனுக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். அவரைப் போல் வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் ராம பக்தர்களாக இருந்தால் பாஜகவிற்கு வாக்களியுங்கள்.

ராவணனின் பக்தர்களாக இருந்தால் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள் என்றார். இதற்கு ராஜஸ்தான் மாநில சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா, கடும் அதிருப்தி தெரிவித்தார். யோகியின் கருத்து ஹனுமன் பக்தர்களை காயப்படுத்தி விட்டது.

எனவே அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தேசிய பழங்குடி ஆணையத் தலைவர் நந்த் குமார் சாய் கூறுகையில், ஹனுமன் ஒரு தலித் அல்ல; அவர் ஒரு பழங்குடி என்று கூறியுள்ளார். இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி