ஆப்நகரம்

இரண்டு மாதத்தில் இது பத்தாவது முறை... அச்சத்தில் டெல்லிவாசிகள்!!

தலைநகர் டெல்லியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 8 Jun 2020, 5:28 pm
டெல்லி -குர்கான் எல்லைப் பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகளோ, கட்டடங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
Samayam Tamil earthquake


இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் சேர்த்து, டெல்லி - புறநகர் எல்லைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடந்த புதன்கிழமை ( ஜூன் 3) இரவு. நொய்டாவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3 ஆக பதிவாகி இருந்தது.

டெல்லி: நள்ளிரவில் இப்படி ஒரு அதிர்ச்சி, சாலையில் குவிந்த மக்கள்!

இதேபோன்று ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் தலைநகரின் வெவ்வேறு பகுதிகளை மையமாகக் கொண்டு முறையே 3.5, 2.7 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து மே 10, 15 ஆம் தேதிகளில் முறையே 3.4, 2.2 என்ற அளவில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.

இவ்வாறு தொடர்ந்து அவ்வபோது நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதால், தலைநகர் டெல்லியில் திடீரென பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுவிடுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு!

லேசான நில அதிர்வுகளை வைத்து, பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அதேசமயம் நிலநடுக்கம் ஏற்படவுள்ளதையும் முன்கூட்டிய கணிப்பது கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி