ஆப்நகரம்

லக்னோவில் வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை!!

லக்னோவில் வரதட்சணை கேட்டு திருமணத்துக்கு தடை போட்ட மணமகனுக்கு மணமகள் வீட்டார் மொட்டையடித்து அசிங்கபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Oct 2018, 1:32 pm
லக்னோவில் வரதட்சணை கேட்டு திருமணத்துக்கு தடை போட்ட மணமகனுக்கு மணமகள் வீட்டார் மொட்டையடித்து அசிங்கபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil லக்னோவில் வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை!!


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அப்துல் கலாம். இவர் திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு நேற்று வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், தங்கச் செயின் வேண்டும் மணமகள் வீட்டாரிடம் மங்கள் சிங் கேட்டுள்ளார். இதைக் கொடுக்க பெண் வீட்டார் மறுத்துள்ளனர். இந்த நிலையில் பழிவாங்கும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் இவருக்கு பெண் வீட்டார் மொட்டை அடித்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மணப்பெண்ணின் தாய் கூறுகையில், ''திருமணத்திற்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் எங்களிடம் மணமகன் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், தங்கச் செயின் கேட்டார். எங்களால் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்தோம். இதையடுத்து, திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணமகன் கூறினார். அவருக்கு யார் மொட்டையடித்தது என்ற விவரம் எங்களுக்குத் தெரியாது'' என்றார்.

இதுகுறித்து மணமகன் அப்துல் கூறுகையில், ''முன்னரே வாகனம் வேண்டும் என்று கேட்டு இருந்தோம். திடீரென நாங்கள் எதையும் கேட்கவில்லை'' என்றார்.

அடுத்த செய்தி