ஆப்நகரம்

மேம்பாலத்தில் தூங்கியவர்கள் மீது ஏறிய சொகுசு கார்- 5 பேர் உயிரிழப்பு

மேம்பாலத்தில் தூங்கியவர்கள் மீது சொகுசு கார் மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பேர் உடல் நசுங்கி உயிரழந்தனர்.

Samayam Tamil 21 Nov 2018, 3:17 pm
மேம்பாலத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
Samayam Tamil haryna
மேம்பாலத்தில் சொகுசு கார் விபத்து- 5 பேர் பலி


ஹிசார் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், இரவில் அப்பாலத்தின் ஓரமாக படுத்து உறங்குவது வழக்கம்.

சம்பவம் நடந்த நாளின் முன்னிரவில், வழக்கம் போல தொழிலாளர்கள், மேம்பாலத்தின் நடைபாதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை பகுதி மீது ஆவேசமாக மோதியது.

இதில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் ஏறியதி. அத்துடன் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதிவிட்டு, அந்த சொகுசு கார் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்தது.

இதனால் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி