ஆப்நகரம்

Coronavirus in India: வெறும் ஒன்றரை மணி நேரம் போதும்; கொரோனா விஷயத்தில் மாஸ் காட்டிய இந்தியா!

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள RT-PCR பரிசோதனை கருவி ஆச்சரியப்படும் வகையில் விரைவாக துல்லியமாக முடிவுகளை அளிப்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2020, 9:07 am
உலகம் முழுவதும் மூன்று கோடிக்கும் அதிகமான மக்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அதிகப்படியான வைரஸ் தொற்றுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 60 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போதைய சூழலில் அதிகப்படியான பரிசோதனைகளை செய்து நோயாளிகளை சரியான சமயத்தில் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிப்பதே கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க ஒரே வழி.
Samayam Tamil Coronavirus Kit


இந்நிலையில் ஈக்வைன் பயோடெக் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி உடன் இணைந்து உள்நாட்டிலேயே RT-PCR பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்துள்ளது. இதற்கு ’குளோபல் டயக்நோஸ்டிக் கிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கட்டுப்படியாகக் கூடிய விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கோவிட்-19 தொற்று இருப்பதை மிகவும் துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கிறது. இதனை அதிகாரப்பூர்வ பரிசோதனைக் கூடங்களில் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை ’குளோபல் டயக்நோஸ்டிக் கிட்’ மூலம் பரிசோதித்தால் ஒன்றரை மணி நேரத்தில் துல்லிய முடிவுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யப்பா...கொரோனா தடுப்பூசி வாங்க இவ்வளவு கோடி ரூபாய் தேவையாம்!

இதனை ஐஐஎஸ்சி-யின் பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியரும், ஈக்வைன் பயோடெக்-கின் நிறுவனருமான உத்பால் தது உறுதிபடுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான பரிசோதனைகள் குறித்த ஆய்வில் பல ஆண்டுகளாக எங்களது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா அலை தொடங்குவதற்கு முன்பிருந்தே தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளோம்.

இந்த அனுபவம் தான் கொரோனாவிற்கான பரிசோதனைக் கருவி தயாரிக்க எங்களுக்கு உறுதுணையாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி