ஆப்நகரம்

திருமணம் முடிந்து திரும்பிய போது, பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 22 பேர் பலி!

மத்திய பிரதேசத்தில், பேருந்து ஒன்று ஆற்றில் கவிழந்த விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 18 Apr 2018, 8:13 am
மத்திய பிரதேசத்தில், பேருந்து ஒன்று ஆற்றில் கவிழந்த விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil madhya pradesh accident


மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில், திருமண விழாவுக்கு சென்ற ஒரு குழுவினர், பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள சோனே என்ற ஆற்றுப்பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆற்றுப்பாலத்தல் இருந்து ஆற்றுக்குள் கவிழந்தது.



இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 22 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த வருகின்றனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

விபத்துச் செய்தியைக் கேட்ட மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி