ஆப்நகரம்

காலில் விழுந்தவரை கண்டு கொள்ளாமல் செல்லும் அமைச்சர்!

மத்திய பிரதேசத்தில் மனு கொடுக்க வந்து காலில் விழுந்தவரை, அமைச்சர் கோவிந்த் சிங் கண்டுகொள்ளாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Feb 2019, 1:19 pm
மத்திய பிரதேசத்தில் மனு கொடுக்க வந்து காலில் விழுந்தவரை, அமைச்சர் கோவிந்த் சிங் கண்டுகொள்ளாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil MP minister govind singh


மத்திய பிரதேச மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோவிந்த் சிங், நேற்று போபாலில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து வந்தனர். .

இந்நிலையில், அமைச்சரை சந்திக்க வந்த சாமானியர் ஒருவர், மனுவோடு அமைச்சரின் காலில் விழுந்தார். ஆனால், அமைச்சர் கோவிந்த் சிங் அவரை கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்று காரில் ஏறிச் சென்றார். அமைச்சர் நகர்ந்தது கூட தெரியாமல் இருந்த சாமானிய மனிதர், சில நொடிகள் தரையோடு தரையாக இருந்துள்ளார். உடனே அமைச்சரின் பாதுகாவலர்கள் அவரை எழுப்பி அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வர, அமைச்சரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி